Monday 10 December 2012

கொத்து மல்லி பிளப்பான்

கொத்து மல்லி பிளப்பான்

கொத்துமல்லியை விதைப்பதற்கு முன்போ அல்லது சுவாச புத்துணர்ச்சி பொருளாக மாற்றுவதற்கு முன்போ, இரண்டாக பிளக்க வேண்டும். வழக்கமாக இது கையில் உடைக்கப்படும். ஆனால் இது ஒரு சிரமமான மற்றும் இதனால் அதிகமாக சேதம் ஏற்படும். எனவே இதனை இயந்திரமாக்குதல் அவசியம் ஆகும். எனவே கொத்துமல்லியை உடைப்பதற்கு CIPHET ஒரு இயந்திரத்தை வடிவமைத்து உருவாக்கியுள்ளது. இது 1 HP மோட்டாரால் இயக்கப்படும். இது ஒரு மணி நேரத்திற்கு 60-80 கிலோ கொத்துமல்லியை பிரித்தெடுக்கும். 6.5 செமீ விட்டம் மற்றும் 10 செமீ நீளம் உடைய இரண்டு உருளைகள், இந்த இயந்திரத்தில் இருக்கும். இந்த இரு உருளைகளும் மாறுபட்ட வேகத்தினால் இயக்கப்படும். இதனால் கொத்தமல்லி இரண்டாக உடைக்கப்படும். கொத்துமல்லியில் 14.2 (%) ஈரப்பதம் இருக்கும் நிலையில் இயந்திரம் அதனை இரண்டாக பிளக்கும்.splitter

மேலும் தகவலுக்கு
மத்திய அறுவடைபின் சார் பொறியியல் மற்றம் தொழில்நுட்ப நிறுவனம் ( லுதியானா, 141004 (பஞ்சாப்)
தொலைபோசி: 91-161-2308669 (அ); 91-161-2305674 (நிறுவனர்)
பேக்ஸ்: 91-161-2308670
 
மின் அஞ்சல் : ciphet@sify.com
இணையதளம்: http://www.ciphet.in

Refarence to : CDAC
 இணையதளம் : www.indg.in

தேவையற்ற பிளாஸ்டிக் பாட்டிலை உபயோகித்து நாற்றங்கால் தயாரித்தல்

தேவையற்ற பிளாஸ்டிக் பாட்டிலை உபயோகித்து நாற்றங்கால் தயாரித்தல்


          
- திரு. சஞ்சய் பயேல்,ஜவகர் தல், தானே
  1. காலியான தேவையற்ற 2 லிட்டர் கொள்ளளவு கொண்ட பாட்டிலை, நீள் வாட்டத்தில் வெட்டி, நெல் நாற்றை வளர்பதற்கு உபயோகப்படுத்தலாம்.
  2. பாட்டிலின் இந்த பாதி பகுதியை, வண்டல் மண், மண்புழு உரம் மற்றும் நெல் உமியை 3:2:1 விகித கலவையை கொண்டு நிரப்ப வேண்டும்.  தோராயமாக, ஒரு பாதி பாட்டிலுக்கு, 300 கிராம் கலவை தேவைப்படும்.
  3. அமிர்தபாணி/பிஜாம்ரூத்துடன் (இயற்கை உரங்கள்) நேர்த்தி செய்யப்பட்ட விதையை இந்த பாட்டிலில் உள்ள படுக்கையில் விதைக்க வேண்டும்.  ஒவ்வொரு படுக்கையிலும், 10 கிராம் விதையை விதைக்க வேண்டும்.
  4. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, நீர் ஊற்றி விதை படுக்கைகளை ஈரப்பதத்துடன் வைத்திருக்க வேண்டும்.
  5. நாற்றுகள், பத்து தினங்களில், நடுவதற்கு தயாராகிவிடும். ஒரு ஹெக்கடரில் நடுவதற்கு, பின்வருபவை தேவையானவை;
     - காலிபாட்டில் எண்ணிக்கை
           (பாதியாக வெட்டப்பட்டவை) -  625
      - விதை                            -   6.3 கிலோ
      - வண்டல் மண்                -  93.8 கிலோ
      - மண்புழுஉரம்                 -  62.5 கிலோ
      - சாம்பல்                         -   31 கிலோ
     - தயாராகும் நாற்றுகள்     -  2,00,000
இந்த முறையை, நகரத்தின் அருகாமையில் உள்ள கிராமங்களில் இடம் மற்றும் வேலையாட்கள் நெருக்கடியான தருணத்தில் உபயோகிக்கலாம்.
மூலம்
இயற்கை சாகுபடி முறைகள்,
தொழில்நுட்ப கூட்டுறவு திட்டம்,FAO, நியுடெல்லி மற்றும் NCOF  , காசியாபாத்.
தயாரித்தது
மகாராஷ்டிர இயற்கை விவசாய குழு (MOFF)

thank to : www.indg.in