Thursday 19 January 2012

நெல்லின் நீர்பாசனத் தொழில் நுட்பம்


நெல்லின் நீர்பாசனத் தொழில் நுட்பம்
பெரியார் வைகை பாசனப்பகுதிகளில் தேவைப்படும் நீரின் அளவு
நடவு நீர்ப்பிடிப்பு பகுதியிலிருந்து நீர் வெளியேற்றப்பட்ட 25 நாளிலிருந்து 65 நாள் வரை (40 நாட்கள்) செய்யப்படுகிறது. முதல் 25 நாட்கள் நாற்றாங்கால் தயார் செய்யப் பயன்படுத்தப்படுகிறது.
Irrigation Tech
சேற்று உழவு செய்ய 70 நாள் கழித்து நடவு செய்த வயல்களில் பாசனம் செய்ய நீர்த்தேவை நாளொன்றுக்கு 10 மி.மீ என்ற விகிதத்தில் தொடர்ச்சியாக அதிகரிக்கிறது. அதிகளவு நீர்த் தேவையான 17 மி.மீ நாள் என்பது 44 நாட்கள் கழித்து (நீர் வெளியேற்றப்பட்ட) அதாவது சேற்ற உழவின் போது ஏற்படுகின்றது.
சமூகப் பொருளாதார குறைபாடுகளால், வெவ்வேறு பாசனப் பகுதிப் பிரிவுகளில் செய்ய ஏற்படும் தாமதத்தை குறைக்க உழவு இயந்திரங்கள் சேற்று உழவு மற்றும் இடுபொருட்கள் இடுதல் போன்றவற்றை உடனடியாகக் கிடைக்க வழிவகைகள் செய்யவேண்டும்.
Irrigation Tech Rice
நெல் வயல்களில் கைவரப்பு தொழில்நுட்பம்
வயல்களில் உள்பகுதியில் சிறிற வரப்புகளை அமைப்பதால் 20-25 சத நீரைச் சேமிக்கலாம்.
நீர் வயல்களில் உறிஞ்சப்பட்டு கீழ்நோக்கிச் செல்வதால் ஏற்படும் இழப்பில் 25 சதவிகிதத்தை டிராக்டர் இணைப்பு கேஜ்வீல் அல்லது உருளை மூலம் குறைக்கமுடியும்.
வயல்வெளிப் பாசனக் கட்டமைக்களின் மூலம் 15-30 சத நீரைச் சேமிக்க முடியும்.

No comments:

Post a Comment